தமிழகத்தில் இன்று
சென்னை:
கிராமப்புற சிறு தொழிலான கைத்தறி மற்றும் கதர்த் துணிகளுக்கு அரசு தரும் மானியத்தை நிறுத்தினால், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும். நாடுஅபாயத்தை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் கூறியுள்ளார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடந்த புத்தக வெளியீட்டு விழாவொன்றில் அவர் பேசுகையில், இத்தனை வருடமாக சிறு தொழிலுக்கு சலுகைகள்வழங்கி விட்டோம். இனிமேலும் சலுகை வேண்டுமா என்று அதிகாரிகள் கேட்கிறார்கள். 50 வயதானவர் இத்தனை வருடமாக சாப்பிட்டுவருகிறார். இனிமேல் ஏன் சாப்பாடு வேண்டும் என்று கேட்டு சாப்பாட்டை நிறுத்தச் சொன்னால், செத்துப் போக வேண்டியதுதான்.
அதுபோல, சிறுதொழில், கதர், கைத்தறிகளுக்குத் தரும் மானி சலுகைகளை நிறுத்தினால், வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விடும். இதனால் நாடுமிகப் பெரிய அபாயத்தை சந்திக்க நேரிடும். இதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications