கிரிக்கெட் சூதாட்டம்: இங்கிலாந்து, தெ.ஆப்பிரிக்கா செல்கின்றன போ-லீஸ் -டீம்--கள்
டெல்லி:
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்குச் சிறப்புக் குழுக்கள் அனுப்பப்படும் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் அஜய் ராஜ் சர்மாதெரிவித்தார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹான்ஸிகுரோனியே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, மேலும் 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள் மற்றும் சிலஇந்திய கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் ஆகியோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள்தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணை முடிந்துவிட்டது.
இவ் வழக்கில் மேலும் தகவல்கள் தேவைப்படுகிறது. அதற்காக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க நாடுகளில்விசாரணை நடத்த சிறப்புக் குழுக்கள் அனுப்பப்படவுள்ளன. ஏற்கெனவே விசாரணைக்குச் சில தகவல்கள்அளிக்கும்படி இரு நாடுகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டது. ஆனால், தகவல்கள் ஏதும் வரவில்லை. இதையடுத்துஇங்கிருந்து சிறப்புக் குழுக்கள் அங்கு சென்று விசாரணை நடத்தும் என்றார் சர்மா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications