தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
இலங்கையில் இன்னொரு போரில் ஈடுபட இந்தியா தயாரில்லை - ஜஸ்வந்த் சிங்
டெஹரான்:
1987-ம் ஆண்டு செய்ததுபோல, இலங்கையில் இன்னொரு போரில் ஈடுபட இந்தியா தயார் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த்சிங் கூறியுள்ளார்.
ஈரான் வந்துள்ள ஜஸ்வந்த் சிங், தலைநகர் டெஹரானில் பேசுகையில், இலங்க்ைகுச் சென்று ராணுவரீதியாக எந்த நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடாது.
1987-ம் ஆண்டு செய்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம். அப்போது அமைதி காக்கும் படை கடைப்பிடித்த பாதையை இப்போது இந்தியாபின்பற்றாது.
இதுவரை இலங்கைத் தரப்பிலிருந்து மனிதாபிமான உதவி கோரி கோரிக்கை ஏதும் வரவில்லை என்றார் ஜஸ்வந்த் சிங்.












Click it and Unblock the Notifications