தமிழகத்தில் இன்று
என்னோடு இருப்பவர்கள் சுத்தமானவர்கள், நாணயமானவர்கள், நேர்மையானவர்கள், ஒழுக்கச் சீலர்கள், கறைபடாத கையினர் என்றால், அந்தபெருமை அனைத்தும் எனக்கேச் சொந்தம் என்று -முதல்வர் கருணா-நிதி கூறினார்.
சென்னையில் வியாழக்கிழமை அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் - சங்கீதா திருமணம் -நடைபெற்றது. இத்திருமணத்தை -நடத்தி வைத்து -முதல்வர்கருணா-நிதி பேசியதாவது:
துரை-முருகனின் திருமணத்தையும் ந-ான் தான் நடத்தி வைத்தேன். அதுமாத்திரமல்ல, இங்கே மணமகனா-ன வீற்றிருக்கின்றவருக்கும் நான்- தான் கதிரவன்என்று பெயர் சூட்டினேன். கதிரவனை பற்றி எல்லாரும் புகழ்ந்தார்கள். அந்த அளவிற்கு -நல்ல மாப்பிள்ளை தான் மணமகள் சங்கீதாவிற்குகிடைத்துள்ளார்.
துரைமுருகன் கர்--நாடகம் சென்று காவேரியைக் கொண்டு வருகிறாரோ இல்லையோ, சங்கீதாவைக் கொண்டு வந்திருக்கிறார். இசையைத் தொடர்ந்து-நதியும் வரும் என்ற -நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அந்த நம்பிக்கைக்கு காரணம் இப்போதே காவிரி நீர் வந்து கொண்டிருப்பது தான்.
துரைமுருகன் எவ்வளவு -நர்மையானவர், -நாணயமானவர், சுத்தமானவர் என்பதற்கு அடையாளமாக இப்போது -நடந்து -முடிந்த சட்டமன்றக்கூட்டத் தொட-ரில் அவருக்கு இரு-முறை சோதனைகள் வந்து, அந்த இரண்டு சோதனைகளிலும் வெற்றி பெற்று தலை -நிமிர்ந்து -நிற்கும் தம்பி தான்துரைருகன் என்பதே எனக்கு பெருமை.
என்னோடு இருப்பவர்கள் சுத்தமானவர்கள், நாணயமானவர்கள், நேர்மையானவர்கள், ஒழுக்கச் சீலர்கள், கறைபடாத கையினர் என்கின்ற பேரும்,புகழும் அவர்களுக்கு இருக்குமேயானால், அந்த பெருமை அனைத்தும் எனக்குச் சொந்தம் என்று பெருமிதம் கொள்ளக் கூடியவன் -நான் என்றார்-முதல்வர் கருணா-நிதி.