For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
மும்பையில் 2 ரெளடிகள் சுட்டுக்கொலை
மும்பை:
மும்பையில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு ரெளடிகள் கொல்லப்பட்டார்கள். மும்பையின் பிரபல ரெளடி சோட்டா ஷகீலின் கூட்டாளிகளான நீலேஷ்கோக்கம் (28), மாஸ்டன் சந்த் ஷேக் (30) ஆகியோர் இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தார்கள்.
இவர்கள் இருவரும் 20 வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டவர்கள். வெள்ளிக்கிழமை அதிகாலை இவர்கள் இருவரும் வியாபாரி ஒருவரிடம்பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இவர்களைக் கண்டதும் போலீசார் இவர்களைச் சரணடையச் சொல்லி வற்புறுத்தினார்கள். ஆனால் அவர்கள் போலீசாரிடமிருந்து தப்பித்து ஓட முயன்றபோது போலீசார் அவர்களை நோக்கிச் சுட்டதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தார்கள்.
Comments
Story first published: Friday, May 26, 2000, 5:30 [IST]