தமிழகத்தில் இன்று
2 ஆண்டு-க-ளில் எல்-லா கிராமங்களுக்கும் தொலைபேசி த-ரு-வா-ராம் அ-மைச்-சர்
சென்னை:
2002ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள எல்லா கிராமங்களையும் தொலைபேசி மூலம் இணைத்து விடுவோம்என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
சென்னையில் அவர் வெள்ளிக் கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மாலையில்செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 17 ஆயிரத்து 991 கிராமங்கள் உள்ளன. அவற்றில் 17845 கிராமங்களுக்கு தொலைபேசி வசதிசெய்து தரப்பட்டுள்ளது. மீதமுள்ள கிராமங்களில் 99 கிராமங்களில் மக்கள் வசிக்கவில்லை. எனவே 55கிராமங்களுக்கு தான் தொலைபேசி வசதி செய்து தரப்பட வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அதையும் செய்துதந்து விடுவோம்.
தமிழ்நாட்டில் தொலைபேசி வசதி கேட்டு விண்ணப்பித்தவர்கள் 5 லட்சத்து 74 ஆயிரம் பேர் காத்திருப்போர்பட்டியலில் உள்ளனர். சென்னையில் மட்டும் 9 லட்சத்து 68 ஆயிரத்து 243 தொலைபேசி இணைப்புகள் உள்ளன.
தமிழ்நாட்டில் தொபைேசி இணைப்புகளில் ஏற்படும் கோளாறுகள் 15 சதவீதம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.ஓரிடத்தில் தொலைபேசி தொடர்பான புகார்கள் வந்தால் சரி செய்வதற்கு 70 மணி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
இதை 20 மணி நேரமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு எம்.டி.என்.எல். வசதி தேவையே இல்லை. அதை விட 10 மடங்கு சிறப்பாக சென்னை தொலைபேசிசெயல்படுகிறது.
2001ல் தொலைத் தொடர்புத் துறை கார்ப்பரேஷனாக மாறவிருப்பதால், எம்.டி.என்.எல். அவசியமில்லை.
தொலைத் தொடர்பு துறையில் தமிழகத்தில் தான் அதிக வருவாய் கிடைக்கிறது. எனவே வளர்ச்சிப் பணிகளுக்காக418 கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
அதற்கு முந்தைய ஆண்டில் 250 கோடி செலவிடப்பட்டது. இன்னும் செலவிட துறை தயாராக உள்ளது.
நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் தொலைத்தொடர்புத் துறை மூலம் மொபைல் போன் வசதி அறிகப்படுத்தப்படும்.சென்னை, மதுரை, கோவை, மாமல்லபுரம் உள்ளிட்ட6 பகுதிகளில் இந்த வசதி கிடைக்கும்.
2002க்குள் இந்தியாவில் எல்லா கிராமங்களிலும் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்பட்டு விடும். அனைத்துகிராமங்களையும் தொலைபேசி மூலம் இணைத்து விடுவோம் என்றார் பாஸ்வான்.