தமிழகத்தில் இன்று
இந்தியாவுடன் --ந-ர-டி-யா-க போர் புரிய ப-யப்-ப-டும் பாகிஸ்-தான்
ஹைதராபாத்:
இந்தியாவுடன் போர் புரிவதற்கு பாகிஸ்தான் அச்சம் கொள்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி கூறினார்.
ஹைதராபாத்தில் கிருஷ்ண பத்திரிக்கா தெலுங்கு நாளிதழ் ஆசிரியர் பி.வெங்கடேஸ்வரலு எழுதிய ரெட் டெரரிசம் இன் இந்தியா என்ற புத்தக வெளியீட்டுவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே தற்போது நடந்து வரும் சண்டை, தாக்குதல்கள், மோதல்கள் தற்போது மிகவும் குறைந்துள்ளது.தீவிரவாதம் குறைந்து வருவதையே இது காட்டுகிறது.
காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாட்டில் இந்தியா பாகிஸ்தான் மோதல்களும் தற்போது கட்டுக்குள் இருக்கின்றன. நாட்டின் ஒற்றுமையைப்பலப்படுத்துவதும், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொள்வதுமே இரு நாடுகளின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
ந--ம-து அண்-டை நாட்-டை வெற்றி கொண்-ட-து பா-து-காப்-பு படை-க-ளுக்-கு மட்-டும் கிடைத்-த -வெற்-றி-யல்-ல அது இந்-தி-ய மக்-க-ளுக்--குகிடைத்-த வெற்-றி-யும் ஆ-கும்.
நாட்டின் பாதுகாப்பிலும், தேசிய ஒற்றுமையிலும் வெற்றி கொள்ள வேண்டும். எல்லையில் அவ்வப்போது நடக்கும் போரையும் மீறி அங்கு வரும்சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது.
கடந்த 1998 ம் வரும் 1 லட்சம் பேர் ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா வந்தார்கள். அடுத்த வருடமான 1999ல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சுற்றுலாவந்துள்ளார்கள். இது அங்கு நடக்கும் போரையும் மீறி சந்தோஷப்பட வைக்கும் விஷயமாகும் என்றார்.
மேலும் அவர் மேற்குவங்காளம், கேரளா வில் நடக்கும் அரசியல் படுகொலைகள், வன்முறைச் சம்பவங்கள் குறித்து மிகவும் வருத்-தம்த-ரு-கின்-ற-ன. -துப்-பாக்-கி-யால் எந்-த ஒ-ரு மாற்-றத்-தை-யும் கொண்-டு வந்-து-விட -மு-டி-யா-து. ஜன-நா-ய-கம், தேர்-தல் மூ--ல-மே அ-து-சாத்-தி-யம்.
அந்தந்த மாநிலங்களில் -போ-லீஸ் அமைச்சர்கள் இந்த சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் செயல்பட வேண்டும் என்-றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications