Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

கள்-ளச் சாரா-ய வியா-பா-ரி-கள் அர--சின் மு-தல் பகை-வர்-கள்

சென்னை:

விஷச் சாராயச் சாவுகளுக்கு காரணமானவர்கள் மக்கள் விரோதிகள் மட்டுமல்ல; அரசின் முதல் பகைவர்கள். அவர்களைக் களைந்து எறிவது காவல்துறையின்தலையாய கடமை என்று தமிழக -முதல்வர் கருணா-நிதி கூறினார்.

மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாநாடு சென்னையில் சனிக்கிழமை துவங்கியது. இரண்டு நாட்கள் -நடைபெறும்இம்மா-நாட்டில் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர்கள், அரசுத் துறை செயலாளர்கள், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டை -முதல்வர் கருணா-நிதி துவக்கி வைத்தார். அவர் தனது துவக்க உரையில் பேசியதாவது:

சட்டம் ஒழுங்கைப் பராமரித்திடும் பணியில் எப்பொழுதும் விழிப்புடன் செயல்படுதல் அவசியம். பிரச்னை உண்டாகும் என்று கருதப்படும் இடங்களைப்பற்றிய தகவல்களை -முன்கூட்டியே சேக-ரித்து எச்ச-ரிக்கையுடன் -நடவடிக்கைகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக காவல் கைதிகள் மரணம் படிப்படியாகக் குறைந்து விட்டாலும் கூட, அதை முற்றிலும் தடுத்து மனித உ-ரிமைகளைக் காப்பாற்றஉறுதியான -நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

விஷச் சாராய சம்பவங்கள் சில அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து துயரத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இவை நிகழாமல் தடுப்பதில் மாவட்ட -நிர்வாகம்,கலால் துறையும், காவல் துறையும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

விஷச் சாராயச் சாவுகளுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மக்கள் விரோதிகள் மட்டுமல்ல; இந்த அரசின் முதல் பகைவர்கள்.அவர்களைக் கண்டு அறிவதும், களைந்து எறிவதும் -நமது -தலையாய கடமை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+