தமிழகத்தில் இன்று
டெல்லி:
கிராமப் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு அதிக அளவில் பெண்குழந்தைகள் சேருவதற்கு மதியம் சமைத்த உணவு வழங்குவதும், பள்ளிகளில்ஆசிரியைகள் நியமிக்கப்பட்டதும்தாம் காரணம் என்று ஒரு ஆய்வில்தெரியவந்துள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) மூலம் நாடுமுழுவதும் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கிராமப் பகுதிகளில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் பெண் குழந்தைகள் சேருகின்றனரா. சேரவில்லை என்றால், ஏன்சேரவில்லை? அதிக அளவில் சேர்ந்தால் அதற்கு என்ன காரணம்? என்று பல தரப்பட்டவகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின் முடிவில் கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு அதிக அளவில் பெண்குழந்தைகள் படிக்க வருகின்றனர் என்பதும், பெற்றோர்களே அதிக ஆர்வத்துடன்தங்களது பெண் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வருகின்றனர் என்று தெரியவந்தது.
கிராமப்புற தொடக்கப் பள்ளிகளில் அதிக அளவில் ஆசிரியைகளை நியமித்துள்ளதும்,மதியம் உணவுப்பொருட்களுக்குப் பதிலாக சமைத்த உணவே தரப்படுவதும் பள்ளிக்குபெண் குழந்தைகள் அதிகம் வருவதற்குக் காரணம் என்று தெரியவந்தது.
அது தவிர இலவச புத்தகம், இலவச சீருடை வழங்கப்படுவதும் ஒரு முக்கிய காரணம்என்று கண்டறியப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications