தமிழகத்தில் இன்று
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை மாற்றி அமைக்கப்பட்டது. முன்னாள்மத்திய அமைச்சரான நிதிஷ் குமார் மீண்டும் மத்திய அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அவருடன்பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த அர்ஜுன் சேதி, பிரிஜ் கிஷோர் திரிபாதி ஆகிய புதியவர்களும் மத்தியஅமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.
நிதிஷ்குமார், நவீன் பட்நாயக், உமா பாரதி ஆகியோர் மத்திய அமைச்சர் பதவிகளை ராஜிநாமா செய்ததை அடுத்துமத்திய அமைச்சரவையில் 3 இடங்கள் காலியாக இருந்தன. அந்த மூன்று இடங்களுக்கும் மூன்று பேரை நியமித்தவாஜ்பாய், ஏற்கெனவே உள்ள சில அமைச்சர்களின் இலாகாக்கள் சிலவற்றை மாற்றியமைத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை பதவியேற்ற நிதிஷ்குமாருக்கு கேபினெட் அமைச்சர் அந்தஸ்துடன் வேளாண்துறைஒதுக்கப்பட்டுள்ளது. அர்ஜுன் சேதிக்கும் கேபினெட் அமைச்சர் அந்தஸ்துடன் நீர்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.பிரிஜ் கிஷோர் திரிபாதிக்கு எஃகுத் துறை இணை அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.
இலாகா மாற்றம் செய்யப்பட்ட அமைச்சர்கள் விவரம்:
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் பதவி கேபினெட் அமைச்சர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுஅத்துறை அமைச்சராக சி.பி. தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நகர்ப்புற மேம்பாட்டுத் துறையைக் கவனித்து வரும் ஜக்மோகன், வறுமை ஒழிப்புத் துறையையும் கூடுதலாகக்கவனிப்பார்.
அனந்த் குமார் இனி சுற்றலா மற்றம் கலாச்சாரத் துறையை மட்டும் கவனிப்பார். அனந்த் குமாரிடமிருந்த இளைஞர்விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறையை இனி சுரங்கத் துறை அமைச்சர் எஸ்.எஸ். தீன்ஷா கூடுதலாகக்கவனித்துக் கொள்வார்.
தமிழகத்தைச் சேர்ந்த என்.டி. சண்முகத்திடமிருந்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கேபினெட் அமைச்சருக்குஉரிய துறையாக உயர்த்தப்பட்டுள்ளது. சண்முகத்துக்கு தற்போது நிலக்கரித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
சுரங்கம் மற்றும் கனிமத்துறை இணை அமைச்சர் ரீதா வர்மாவிடம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையும், உணவுபதப்படுத்துதல் துறை இணை அமைச்சர் சயத் ஷானவாஸ் ஹுசேனிடம் இளைஞர் விவகாரம் மற்றும்விளையாட்டுத் துறையும் வழங்கப்பட்டுள்ளது.
இணை அமைச்சர்கள் ஹுகும் தியோ நாராயண் யாதவுக்கு தரைவழிப் போக்குவரத்துத் துறையும், தேவேந்திரபிரதானுக்கு வேளாண் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மனித வளத்துறை இணை அமைச்சர் ஜெய்சிங் ராவ் கெய்க்வாட் பாட்டீலிடம் சுரங்கத்துறையும், உணவுபதப்படுத்துதல் துறையைக் கவனித்து வந்த அமைச்சர் சாவோபா சிங்கிடம் கலாசாரம், இளைஞர் விவகாரம் மற்றும்விளையாட்டுத் துறையும் வழங்கப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications