தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
பிஜியில் புரட்சிக்காரர்கள் தாக்கி போலீஸ்காரர் சாவு

சுவா:

பிஜியில், புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடின் ஆதரவாளர்கள் தாக்கியதால்காயமடைந்த போலீஸ்காரர் இறந்தார். இதனால் தலைநகர் சுவாவில் பதற்றம்ஏற்பட்டுள்ளது.

மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான ஆயும் தாங்கியக் கும்பல் ஆட்சியைக்கைப்பற்றியது. பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட பல எம்.பிக்கள்நாடாளுமன்றத்திற்குள் காவலில் வைக்கப்பட்டனர்.

புரட்சி ஏற்பட்ட பிறகு சுவாவில் வன்முறை வெடித்தது. இந்தியர்களின் கடைகள்,வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. இருப்பினும் உயிர்ப் பலி ஏதும் இல்லாமல்இருந்தது. இந்த நிலையில் புரட்சி தொடர்பான வன்முறைக்கு முதல் முதலாக ஒருபோலீஸ்காரர் பலியாகியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்கு மேல் ஜார்ஜ் ஸ்பீடின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றம்நோக்கி ஆயுதங்களுடன் ஊர்வலமாகச் சென்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தபோலீஸார் முயன்றனர். ஆனால் அவர்களிடம் துப்பாக்கி உள்பட எந்த ஆயுதமும்இந்த நிலையில் கூட்டத்தில் துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டது.

இந்த மோதலின்போது காயமடைந்த பிலிப்போ செவுலா என்ற போலீஸ்காரர்ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று பிஜிபோலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஜிப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது. 48 மணி நேரத்தில் புரட்சிக்காரர்கள்பிடியில் உள்ள அனைவரும் விடுவிக்கப்பட்டு விடுவார்கள் என்று ஜார்ஜ் ஸ்பீட்அறிவித்த சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+