தமிழகத்தில் இன்று
சாவகச்சேரியில் சிக்-கி-யுள்-ள 15,000 அப்-பா-வித் தமி-ழர்-கள்
டெல்லி:
இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து கொண்டிருக்கும் சாவகச்சேரிப் பகுதியில் 15,000க்கும் மேற்பட்டபொதுமக்கள் மாட்டிக் கொண்டுள்ளதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் அப்பகுதியை விட்டு வெளியேறி விடாமல், இலங்கை ராணுவம், மார்ட்டர் மற்றும் ஆர்ட்டில்லரி தாக்குதல்களைமேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் லண்டன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டிருந்தது. அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருந்ததாவது:
பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற முடியாமல் அப்பாவிப் பொதுமக்கள் தவித்துக் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிள் தரப்பில் அறிவிக்கப்பட்டபோர்நிறுத்தத்தையடுத்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்ல சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் காத்திருந்தனர்.ஆனால்பொதுமக்களை வெளியேற விடாமல் ராணுவம் தடுத்து வருகிறது.
பொதுமக்களை கேடயமாக இலங்கை ராணுவத்தினர் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் இலங்கை அரசை நிர்பந்திக்கவேண்டும். இதன் மூலம் வான்வழித் தாக்குதல், தொடர் குண்டு வீச்ச ஆகியவற்றிற்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாக நேரிடும்.
அப்பாவி பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் விடுதலைப் புலிகள், தற்காலிக போர் நிறுத்தத்தைஅறிவித்திருந்தனர். ஆனால் இதை ராணுவம் மதிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை முழுவதும் சாவகச்சேரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ராணுவம்தொடர்ந்து குண்டுவீச்சில் ஈடுபட்டிருந்தது. வான் வழித் தாக்குதலிலும் ராணுவம் ஈடுபட்டது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications