தமிழகத்தில் இன்று
லண்டன்:
வலிப்பு நோய்க்குக் காரணமான இரண்டு புதிய உயிரணுக்களை (ஜீன்கள்) ஸ்காட்லாந்தைச்சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
டைம்ஸ் பத்திரிகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்தடேவிர் போர்டியஸ் மற்றும் அவரது குழவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஜீன்களைகண்டுபிடித்துள்ளனர். எடின்பர்க் நகரிலுள்ள மனித மரபியல் மருத்துவ ஆய்வுக்கவுன்சிலில் இவர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.
மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு ஸ்காட்லாந்து குடும்பத்தினரை கடந்த முப்பது ஆண்டுகளாகசோதனை செய்து பார்த்த பின் இந்த ஜீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக்குடும்பத்தினரின் உறுப்பினர்களில் பலர் பாரம்பரியமாக மன நிலை பாதிக்கப்பட்டநிலையில் இருந்தனர். இதையடுத்து அவர்களிடம் தீவிர ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வின்போது அந்தக் குடும்பத்தில் மன நிலை பாதிக்கப்பட்டவர்களின் 23 ஜோடிகுரோமோசோம்களில், முதல் குரோமோசோமில் உள்ள இரண்டு ஜீன்கள் மட்டும்பாதிப்படைந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஜீன்களுக்கு, "டிஸ்க் 1, டிஸ்க் 2 (DISRUPTED-IN-SCHIZOPHRENIA(DISC) 1 AND 2) என பேராசிரியர் போர்டியஸ் பெயரிட்டுள்ளார்.
வலிப்பு நோயை அதிகப்படுத்தும் ஜீன்கள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இப்போதுதான் முதல் முறையாக நோய்க்குக் காரணமான ஜீன் கண்டறியப்பட்டுள்ளது.
தனது கண்டுபிடிப்பு குறித்து பேராசிரியர் போர்டியஸ் கூறுகையில், வலிப்பு நோயைஅதிகப்படுத்துவது ஜீன்கள்தான் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. இப்போதுஅதை உறுதிப்படுத்தும் வகையில் வலிப்பு நோய்க்குக் காரணமான ஜீன்கள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஜீன்கள், ஸ்காட்லாந்து குடும்பஉறுப்பினர்களிடம் மட்டுமே உள்ளது. இது பிற நோயாளிகளிடமும் உள்ளதா என்பதுகுறித்து ஆராயப்பட வேண்டும்.
இருப்பினும், வலிப்பு நோய்க்குக் காரணம் இந்த இரண்டு ஜீன்கள்தான் என்பதை மறுக்கமுடியாது. இந்த ஆய்வு இரண்டு ஜீன்களோடு நிற்குமா அல்லது அதன் எண்ணிக்கைஅதிகரிக்குமா என்பது குறித்து இப்போதைக்குக் கூற முடியாது என்றார் அவர்.