தமிழகத்தில் இன்று
சுவா:
பிஜித் தீவின் தற்காலிக பிரதமராக பதவியை ராஜினாமா செய்த அதிபர் மாராவின் மருமகன் ரத்து எபலி நைலதிகாவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிஜிஅரசின் ரேடியோவில் இந்த செய்தி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை ராணுவம் பிஜித் தீவின் ஆட்சியைக்கைப்பற்றியபோது அதற்கு உறுதுணையாக இருந்தவர் நைலதிகாவ் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படும் என்று ராணுவ ஆட்சியாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டதாக ரேடியோ செய்தியில் கூறப்பட்டது.
1987ம் ஆண்டு வரை நைலதிகாவ், ராணுவத் தளபதியாக இருந்தார். 87-ல் ரபுகா தலைமையில் புரட்சி நடந்த பிறகு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.பிறகு இங்கிலாந்துக்கான பிஜித் தீவின் தூதராக இருந்தார். கடந்த ஆண்டுதான் பிஜிக்குத் திரும்பி வந்தார்.
இவரது நியமனம் குறித்த முறையான அறிவிப்பு புதன்கிழமைதான் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
நைலதிகாவின் மனைவியும், மாராவின் மகளுமான ஆதி கோய்லா மாரா, பதவி நீக்கம்செய்யப்பட்ட பிரதமர் மகேந்திர பால் செளத்ரி ஆகியோர் உள்பட இன்னும் 30 பேர் தொழிலதிபர்ஜார்ஜ் ஸ்பீடினால் பினைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications