தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்தியாவில் போலியோ நோயை ஒழிக்க ரூ. 39 கோடி நிதியுதவி அளிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.
இந்த நிதியுதவி யுனிசெப் மூலம் இந்தியாவுக்கு வழங்கப்படும். இதுதொடர்பான ஒப்பந்தம் இந்தியாவுக்கான ஜப்பான் அதிகாரி நொபுவாகி இடோ, யுனிசெப்பிரதிநிதி ஆலன் கோர்ட் ஆகியோருக்கு இடையே டெல்லியிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் கையெழுத்தானது.
தடுப்பு மருந்துகள், போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் திட்டத்திற்கான பிற செலவுகள், இந்த நிதியுதவி மூலம் ஈடுகட்டப்படும்.2000-மாவது ஆண்டில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு 88.2 மில்லியன் போலியோ சொட்டு மருந்துகளை யுனிசெப் வழங்கும். வட கிழக்கு இந்தியாவில் 1.65 கோடிகுழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், கிழக்கு பீகார்,மணிப்பூர், மிஸோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இத்திட்டம் நிறைவேற்றப்படும்.
1996-ம் ஆண்டு முதல் இந்தியாவில் போலியோ ஒழிப்புத் திட்டத்திற்கு ஜப்பான் உதவி வருகிறது. தற்போதைய உதவியின் மூலம் இதுவரைஇத்திட்டத்திற்காக ஜப்பான் ரூ. 83 கோடி கொடுத்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications