For Quick Alerts
For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
2 பஸ்கள் மோதலில் 10 பேர் சாவு
கோவை:
கரூர் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 10 பேர் இறந்தனர். 60 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
ஈரோட்டிலிருந்து புதன்கிழமை மதியம் ஒரு பஸ் புறப்பட்டுச் சென்றது. இந்த பஸ் கரூருக்கும் கொடுமுடிக்கும் இடையே வேலப்பம்பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து வந்த பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.
இரண்டு பஸ்களின் முன் பகுதியும் பலத்த சேதமடைந்தன. இதில் 5 பெண்கள், 4 ஆண்கள்
ஒரு குழந்தை உட்பட 10 பேர் இறந்தனர். 60 பயணிகள் காயமடைந்தனர்.
விபத்தில் காயமடைந்த அனைவரும் கொடுமுடி மற்றும் கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்தில் இறந்தவர்களின் விபரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Story first published: Wednesday, May 31, 2000, 5:30 [IST]