செயலை விட அதன் பயனை நேசித்தால்!
புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துங்கள் - ஏற்றுமதியாளர்களுக்கு மாறன் கோரிக்கை
டெல்லி:
ஏற்றுமதித் துறையில் உலக நாடுகளின் போட்டியைச் சமாளிக்க புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உற்பத்தியை அதிகரிக்கும்படிபொறியியல் துறை ஏற்றுமதியாளர்களை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறன் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற பொறியியல் துறை ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சிலின் அகில இந்திய விருது வழங்கும் விழாவில்அவர் பேசியதாவது:
ஏற்றுமதித் துறையில் பிற உலக நாடுகளுடன் போட்டியிடும் நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் பொறியியல்துறைப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்துள்ளது. புதியதிட்டங்கள், அதிக நிதி ஒதுக்கீடு என பல்வேறு வகைகளில் ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு உதவி செய்து வருகிறது.
ஆகவே, பொறியியல் துறைப் பொருட்கள் ஏற்றுமதியாளர்களும், உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில் புதியதொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதுடன், உற்பத்தியையும் அதிகரிக்கவேண்டும். அப்போதுதான் இந்தியாவும் பிற நாடுகளுடன்போட்டியிடும் நிலைக்கு உயர்ந்து, சிறந்த நாடாக விளங்கமுடியும்.
பொறியியல் துறையின் வளர்ச்சிக்கு புதிய எளிமையான பொருளாதாரக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது. 2000-2001-ம்ஆண்டுக்கான நிதி ஆண்டில் ரூ.23,650 கோடிக்கு ஏற்றுமதி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகளில் மத்திய அரசுஈடுபட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 18 சதவீதம் அதிகமாகும்.
ஏற்றுமதி அளவை அதிகரிக்கும் அதே நேரத்தில் ஏற்றுமதியாளர்கள் தாங்கள் தற்போது பயன்படுத்தி வரும் தொழில்நுட்பங்களைபுதியவற்றுக்கு மாற்றிக் கொள்ளவேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்க தக்க புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
ஏற்றுமதியைக் கருத்தில் கொண்டு, நாட்டில் மேலும் 10 சிறப்பு பொருளாதார வளர்ச்சி மண்டலங்கள் உருவாக்கப்படும். இவற்றில்100 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீடு இருக்கும் என்றார் முரசொலி மாறன்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications