தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பா.ம.க. உண்ணாவிரதம்

சென்னை:

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதிலும் செவ்வாய்க் கிழமை பாட்டாளி மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பாமக தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.

இலங்கையில் சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படும் என்றுபாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

அதன்படி தமிழகத்தில் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பும், தாலுகா நகரங்களில் தாசில்தார் அலுவலகம்முன்பும் பாமகவினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரில் உண்ணாவிரதம் நடைபெற்றது. பாமக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமானஜி.கே.மணி துவக்கி வைத்துப் பேசினார்.

இலங்கைப் பிரச்சினையில் பிரதமர் வாஜ்பாய் எடுத்துள்ள நிலையை பாமக பாராட்டுகிறது.

சிங்கள ராணுவத்திற்கு அமெரிக்கா ராணுவ உதவி செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளதையும் வரவேற்கிறோம் என்றார்.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் பாமகவின் மாநில நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+