For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இலங்-கையிலிருந்-து 7 தமிழக மீனவர்கள் விடுதலை
சென்னை:

இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 17 தமிழக மீனவர்களில் 7 பேர் வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் கொழும்பிலிருந்து திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மீனவர்கள் சுவைமுத்து, எஸ்.கைலாசம், லிங்கம், பி.முத்துசாமி, ஏ.ஆபாகிழவன், ஈ.மணிகண்டன், ராமநாதன் ஆகியோர் திருவனந்தபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்கள் உள்-ப-ட 17 பேர் கடந்த பிப்ரவரி மாதம் ராமேஸ்வரம் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது இலங்கைக்கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக இலங்கையில் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதையடுத்து முதல்வர் கருணாநிதி பிரதமர் வாஜ்பாயை சந்தித்து இதுகுறித்து தெரிவித்தார்.

முதல்வர் கருணாநிதி எடுத்துக் கொண்ட முயற்சியினால் மொத்தம் உள்ள 17 மீனவர்களில் 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதி 10 பேர் விரைவில்விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் தெரிவிக்கிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X