தமிழகத்தில் இன்று
10 ஆண்டுக்குள் வறுமையை ஒழிப்போம் - நிதி அமைச்சர் சின்ஹா
டெல்லி:
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் வறுமையை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாதெரிவித்தார்.
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பொருளாதாரத் துறையில் உலக நாடுகளுடன் போட்டியிடும் வகையில் இந்தியாவின் பொருளாரத்தை மேம்படுத்து புதிய பொருளாதாரக் கொள்கைகளைமத்திய அரசு அறிவித்து அவற்றைச் செயல்படுத்தி வருகிறது.
அரசியல் ஒருமித்த கருத்து எட்டப்பட்டால்தான், பொருளாதாரக் கொள்கைகளால் முழுமையான பயன் கிடைக்கும். அது அவ்வளவு எளிதானவிஷயமில்லை. பொருளாதாரக் கொள்கைகளை முழு வீச்சில் தீவிரமாக செயல்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. ஆனால், அதற்கு அரசியல் கட்சிகளும்,அனைத்துத் தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டவேண்டும்.
பொருளாதாரக் கொள்கைகள் குறித்து ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது என்பது மிகவும் கடினமான காரியம். இருப்பினும், நாட்டின் பொருளாதாரமுன்னேற்றத்துக்கு அதைச் செய்து முடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
கடந்த ஆண்டு முழுமையான பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருந்தது. அடுத்த ஆண்டுக்குள் இதை 8 சதவீதமாக அதிகரிக்க தக்க நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நாட்டில் வறுமையை முழுமையாக ஒழிக்கவும் முயற்சிகள்எடுக்கப்பட்டுள்ளன.
சமூக நீதி இல்லாத பொருளாதார வளர்ச்சி மனிதாபிமானம் இல்லாத செயலாகிவிடும். ஆனால், பொருளாதார வளர்ச்சி இல்லாத சமூக நீதியைஏற்படுத்துவது என்பது முடியாத விஷயம்.
ஏற்றுமதி, இறக்குமதியைப் பொறுத்தவரை அதன் சதவீதம் நாட்டின் மொத்த உற்பத்தியில் 10 சதவீதமாக உள்ளது. அடுத்த 10 ஆண்டில் இதன் சதவீதம்இரு மடங்காக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார் சின்ஹா.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications