தமிழகத்தில் இன்று
மாநிலங்களுக்கு சுயாட்சி தேவை என்--கி-றார் பஞ்சாப் முதல்வர்
சென்னை:
மாநில சுயாட்சி கோருவது பிரிவினை ஆகாது. மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கினால் இந்தியா மேலும் வலுவடையும் என்று பஞ்சாப் முதல்வர்பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்தார்.
ஈரோட்டில் நடைபெறும் மதிமுக மாநாட்டில் பங்கேற்பதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் நிருபர்களுக்குஅளித்த பேட்டி:
மாநில சுயாட்சிகோரிக்கையை திமுகவுக்குப் பின் அகாலிதளம்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்திய அரசியல் சட்டம் கூட்டாட்சித் தத்துவத்தைஅடிப்படையாகக் கொண்டது. ஆனால், நீண்ட காலமாக மத்தியிலும், மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றதால், மாநிலங்களின் அதிகாரம்கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொள்ளப்பட்டன.
நாட்டில் கோடிக்கணக்கான ஏழைகள் உள்ளனர். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தரப்படாவிட்டால், இந்த மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது.எனவேதான் நாங்கள் மாநில சுயாட்சி வேண்டும் என்கிறோம்.
இந்தியாவில் பஞ்சாப் மக்கள் 2 சதவீதம்தான் உள்ளனர். ஆனால், சுதந்திரத்துக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களில் 80 சதவீதம் பேர் பஞ்சாபைச்சேர்ந்தவர்கள். நாங்கள் தேசப்பற்று மிக்கவர்கள்.
இந்தியா வலுமிக்கதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.
மாநிலங்கள் வலிமையானவைகளாக இருந்தால்தான் இந்தியா வலுமிக்கதாக இருக்கும். உறுப்புகள் வலிமையாக இருந்தால்தான் உடல் வலிமையாகவிளங்கும். மாநில சுயாட்சி கோரிக்கை காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த பாதிப்பும் வராது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையை கையாள வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது. இந்த நாட்டுக்கு கவலை ஏற்படுத்தும் பிரச்சினைகளில் நாங்கள் கருத்துதெரிவிக்க முடியாது. இதுவொரு சர்வதேச பிரச்சினை என்றார் பாதல்.