தமிழகத்தில் இன்று
த-மி-ழ-கத்-தில் அதி-க-ரித்-து வ-ரும் குழந்தைத் தொழிலாளர்கள்
திருப்பூர்:
குழந்தைத் தொழிலாளர்கள் சமுதயாத்தின் மிகப்பெரிய கொடுமையான விஷயம். தமிழகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்கள் பெருகுவதைக் குறைக்கவேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ரஹ்மான்கான் கூறினார்.
திருப்பூரில் தென்னிந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்களைக் குறைக்கும் வகையில் சர்வதேச தொழிலாளர்கள் நல அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில்கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது அவலத்திற்குரியது. இதைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசுமுன்வரும். மேலும் பெற்றோர்கள் பணம் சம்பாதிப்பதற்காக தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்புகிறார்கள்.
இதனால் அவர்களின் எதிர்கால வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகிறது. இதுவே குழந்தைத் தொழிலாளர்கள் பெருகுவதற்குக் காரணம். பெற்றோர்கள்போதிய அளவு கல்வியறிவு பெறாமல் இருப்பதுதான் இதற்கு முதன்மையான காரணம்.
அரசிடம் அனுமதி பெறாமலோ, பதிவு செய்யாமலோ தொழிற்சாலைகள் நடத்திக் கொண்டு குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகளை முதலில் அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும். பின்னர் அவர்கள் குழந்தைத் தொழிலாளர்கள் வேலைக்கு வைத்திருப்பதைதடை செய்ய வேண்டும்.
குழந்தைத் தொழிலாளர்கள் நலச் சட்டத்தின் கீழ் தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்லும் சிறுவர், சிறுமியரை அங்கிருந்து நீக்க வேண்டும் என்றார்.
திருப்பூர் மாவட்டக் கலெக்டர் ஜி.சந்தானம் கூறுகையில், திருப்பூர், அவினாசி, பல்லாடம் போன்ற இடங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிக அளவில்இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சராசரியாய் 15 மாணவர்கள் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போதே அங்கிருந்து நீக்கப்பட்டு வேலைக்கு அனுப்பப்பட்டுவிடுகிறார்கள்.
33 சதவீதம் பேர் நடுநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும்போது இடையில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விடுகிறார்கள்.
இதைத் தடுத்து நிறுத்துவதற்காக இந்த வருடம் 5 முதல் 7 வயதிற்குட்பட்ட 5000 சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் வகையில் அவர்களை வேலைக்குப்போகாமல் பார்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் 8 முதல் 12 வயதிற்குட்பட்ட 2000 சிறுவர்களை பள்ளிக்கூடத்திற்குஅனுப்புவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவர்கள் இந்த வருடம் முதல் வேலைக்குச் செல்லாமல் பள்ளிகளுக்குச் செல்லுவதற்கு அரசு உதவியும், ஊக்கமும் அளிக்கும்.
தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பி பணம்சம்பாதிக்கும் 1200 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கோடை விடுமுறையின் போது விழிப்புணர்வுமுகாம்கள் நடத்தவும் அரசு தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications