தமிழகத்தில் இன்று
பரோட்டா கடை "மாணவரின் சாதனைக்கு முதல்வர் பாராட்டு
சென்னை:
பரோட்டா கடையில் வேலை பார்த்துக் கொண்டே படித்து ப்ளஸ் டூ தேர்வில் புவியியல் பாடத்தில் மாநிலத்திலேயேஇரண்டாமிடம் பெற்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவருக்கு மேல்படிப்பிற்கான அனைத்து உதவியும்அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
மதுரையில் வசித்து வருபவர் வீரபாண்டி. அங்குள்ள திரு.வி.க. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தஇவர் புவியியல் பாடத்தில் 200 க்கு 194 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாம் இடத்தைப்பெற்றுள்ளார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த வீரபாண்டி குடும்ப சூழ்நிலையின் காரணமாக பரோட்டா கடையில்வேலை பார்த்துக் கொண்டே கடும்முயற்சி எடுத்துப் படித்து புவியியலில் தமிழகத்திலேயே இரண்டாம் இடத்தைப்பெற்றுள்ளார்.
முதல்வர் பாராட்டு:
பரோட்டா கடையில் வேலை பார்த்துக் கொண்டே படித்த இவருக்கு எனது பாராட்டுக்கள். குடும்பத்தின் வறுமைநிலை காரணமாக இவரால் மேல் படிப்பைத் தொடர முடியவில்லையே என்று கலங்க வேண்டாம்.
இவரது மேல்படிப்பிற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்றார்.
ஜூன் 4 ம் தேதி அவர் சென்னையில் முதல்வரைச் சந்தித்து நிதியுதவியைப் பெற்றுச் செல்லலாம் என்று தலைமைச்செயலக செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications