தமிழகத்தில் இன்று
"எம்.பியாக இருக்கும் முதல்வர்கள் நாடாளுமன்றத்திற்கு வரக் கூடாது
ஹைதராபாத்:
எம்.பி.யாக இருப்பவர், ஒரு மாநிலத்தின் முதல்வராகவோ, அமைச்சராகவோ நியமிக்கப்பட்டால் அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக்கூடாது என்று சபாநாயகர்கள் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.
ஹைதராபாத்தில் கடந்த மூன்று நாட்களாக 63-வது சபாநாயகர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்தார். இதில் லோக்சபா சபாநாயகர், துணை சபாநாயகர், மாநில சட்டசபை சபாநாயகர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், நம் நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. அடுத்தடுத்த தேர்தல்களில் நாட்டில்உள்ள கட்சிகள் வேறு வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் காலகட்டம் இது.
நாட்டின் ஸ்திரத்தன்மையை கூட்டணி ஆட்சியால் மட்டுமே தர முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆளுங்கட்சி கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணி என்றஇரண்டு முனை கூட்டணி மட்டுமே நிலையாக இருக்க முடியும் என்ற நிலை உள்ளது. கூட்டணி ஆட்சியில் உள்ளவர்கள் கட்சியிலிருந்து பிரிந்தால் அந்த ஆட்சியும்கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளது என்றார்.
மாநாடு முடிந்தவுடன் சபாநாயகர் பாலயோகி நிருபர்களிடம் பேசுகையில்,
சபாநாயகர்களின் பாரபட்சமற்ற நடவடிக்கைக்கு அடிகோலும் வகையிலும், அவர்களுக்கென்று நெறிமுறைகளை உருவாக்கும் வகையிலும் கமிட்டி ஒன்றுஅமைக்க முடிவு செய்யப்பட்டது.
எம்.பியாக உள்ள ஒருவர் மாநிலத்தின் முதலமைச்சராகவோ, அமைச்சராகவோ நியமிக்கப்பட்டால் அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக்கூடாது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதே நேரம் மாநில சபாநாயகர்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசியல் நடவடிக்கைகளில்ஈடுபடலாம்.
மக்கள் பிரதிநிதிகள் சபை, நீதித்துறை, மற்றும் நிர்வாகத்துறை ஆகியவை நம்நாட்டின் தூண்களாக உள்ளன. இவை மூன்றும் சுதந்திரமாகவும்,முரண்பாடின்றியும் செயல்பட வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
முன்பு ஒருமுறை ஒரிசா முதல்வர் கிரிதர் கோமாங்கே முதல்வராக இருந்து கொண்டே லோக்சபாவில் ஓட்டுப் போட்டதால் அப்போதைய வாஜ்பாய் ஆட்சிகவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications