தமிழகத்தில் இன்று
"எம்.பியாக இருக்கும் முதல்வர்கள் நாடாளுமன்றத்திற்கு வரக் கூடாது
ஹைதராபாத்:
எம்.பி.யாக இருப்பவர், ஒரு மாநிலத்தின் முதல்வராகவோ, அமைச்சராகவோ நியமிக்கப்பட்டால் அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக்கூடாது என்று சபாநாயகர்கள் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.
ஹைதராபாத்தில் கடந்த மூன்று நாட்களாக 63-வது சபாநாயகர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்தார். இதில் லோக்சபா சபாநாயகர், துணை சபாநாயகர், மாநில சட்டசபை சபாநாயகர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், நம் நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. அடுத்தடுத்த தேர்தல்களில் நாட்டில்உள்ள கட்சிகள் வேறு வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் காலகட்டம் இது.
நாட்டின் ஸ்திரத்தன்மையை கூட்டணி ஆட்சியால் மட்டுமே தர முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. ஆளுங்கட்சி கூட்டணி, எதிர்க்கட்சி கூட்டணி என்றஇரண்டு முனை கூட்டணி மட்டுமே நிலையாக இருக்க முடியும் என்ற நிலை உள்ளது. கூட்டணி ஆட்சியில் உள்ளவர்கள் கட்சியிலிருந்து பிரிந்தால் அந்த ஆட்சியும்கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளது என்றார்.
மாநாடு முடிந்தவுடன் சபாநாயகர் பாலயோகி நிருபர்களிடம் பேசுகையில்,
சபாநாயகர்களின் பாரபட்சமற்ற நடவடிக்கைக்கு அடிகோலும் வகையிலும், அவர்களுக்கென்று நெறிமுறைகளை உருவாக்கும் வகையிலும் கமிட்டி ஒன்றுஅமைக்க முடிவு செய்யப்பட்டது.
எம்.பியாக உள்ள ஒருவர் மாநிலத்தின் முதலமைச்சராகவோ, அமைச்சராகவோ நியமிக்கப்பட்டால் அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக்கூடாது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதே நேரம் மாநில சபாநாயகர்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அரசியல் நடவடிக்கைகளில்ஈடுபடலாம்.
மக்கள் பிரதிநிதிகள் சபை, நீதித்துறை, மற்றும் நிர்வாகத்துறை ஆகியவை நம்நாட்டின் தூண்களாக உள்ளன. இவை மூன்றும் சுதந்திரமாகவும்,முரண்பாடின்றியும் செயல்பட வேண்டும் என்றும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
முன்பு ஒருமுறை ஒரிசா முதல்வர் கிரிதர் கோமாங்கே முதல்வராக இருந்து கொண்டே லோக்சபாவில் ஓட்டுப் போட்டதால் அப்போதைய வாஜ்பாய் ஆட்சிகவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications