தமிழகத்தில் இன்று
"குளுகுளு ஊட்டிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து சிறப்பு ரயில்
கோவை:
"குளு குளு ஊட்டிக்குச் செல்லும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது குறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ராஜரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளதாவது:
சென்னையிலிருந்து கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் காலை வந்து சேர்கிறது. இந்தரயில் பயணிகளின் வசதிக்காகவும், மேட்டுப்பாளையத்திலிருந்து செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், புதியசிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 9.15 மணிக்கு இந்த ரயில் புறப்படும். காலை 10.20 மணிக்கு குன்னூர்சென்றடையும். பின்னர் அங்கிருந்து 10.35 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்டு 12.45 மணிக்கு சென்றடையும்.
மாலை 1.15 மணிக்கு ஊட்டியிலிருந்து புறப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கு 5.40 மணிக்கு வந்தடையும்என்று அவர் கூறியுள்ளார்.