தமிழகத்தில் இன்று
மனநோயாளியால் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 29 -கு-ழந்-தை-கள் மீட்பு
வேஸ்ஸர் பில்க்:
ஜெர்மனியில் 29 குழந்தைகளையும், 3 ஆசிரியர்களையும் பிடித்து வைத்திருந்த மனநோயாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தி அவரிடமிருந்துபிணைக்கைதிகள் அனைவரையும் மீட்டனர்.
ஜெர்மனியில் வேஸ்ஸர் பில்க் பகுதியில் இயங்கி வரும் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் மனநோயாளி ஒருவர் 29குழந்தைகளையும், 3 ஆசிரியர்களையும்பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்திருந்தார்.
போலீசார் எவ்வளவு முயன்றும் அவர் பிணைக்கைதிகளை விடுவிக்கவில்லை. இறுதியில் 7 குழந்தைகளை விடுவித்து தனக்கு ஒரு விமானத்தையும், பஸ்சையும்தந்தால் அனைவரையும் விடுவிப்பதாக நிபந்தனை போட்டார்.
தனக்குக் கொடுக்கும் விமானத்தில் தான் லிபியா செல்லத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அனைவரையும், அந்த மனநோயாளியிடமிருந்து உயிருடன் மீட்கத் திட்டமிட்டனர்.
இறுதியில் போலீசார் அவர் குழந்தைகளையும், ஆசிரியரையும் அடைத்து வைத்திருந்த பகுதிக்குச் சென்று துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். அத்துப்பாக்கிச்சூட்டில் அவன் காயமடைந்து கீழே விழுந்தார்.
பின்னர் போலீசார் மீதியுள்ள 25 பேரையும் மீட்டனர். குழந்தைகள் அனைவரும் 2 முதல் 8 வயதிற்குட்பட்டவர்கள். கடத்தி வைக்கப்பட்டிருந்தபிணைக்கைதிகளுக்கு அவர் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. அவர்களை துன்புறுத்தவும் இல்லை.
மீட்கப்பட்ட அனைத்து குழந்தைகளும், ஆசிரியர்களும் பத்திரமாக அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். மனநிலை பாதிக்கப்பட்டுகாப்பகத்தில் உள்ள அனைவரையும் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்த அந்த மனநோயாளிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
விடுவிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் பலூன்களை வைத்துக்கொண்டும், கரடிப்பொம்மைகளை வைத்துக் கொண்டும் கிட்டத்தட்ட 28 மணிநேரத்திற்குப்பின் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
மனநோயாளியைப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications