தமிழகத்தில் இன்று
து-பாய் போக விமா-ன நிலை-யம் வந்-த 4 பேர் விபத்-தில் சா-வு
சென்னை:
துபாய்க்கு செல்வதற்காக விமானம் ஏற வந்தவர்களின் வேன் மீது லாரி மோதியதில் 4 பேர் பலியாயினர். 8 பேர் பலத்த காயத்துடன் சென்னை அரசுபொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கோர விபத்து சென்னை அருகில் இரும்புலியூரில் சனிக்கிழமை காலை நடந்தது. திருச்சி அருகே திட்டக்குடியை சேர்ந்த 17 பேர் துபாய்க்கு வேலைக்குசெல்வதற்காக திட்டமிட்டிருந்தனர். அதற்காக சனிக் கிழமை காலை விமானத்தில் அவர்கள் புறப்படத் தயாராக இருந்தனர். அதன்படி 17 பேரும்வேனில் திட்டக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டனர்.
சனிக்கிழமை காலை 6 மணியளவில் வேன் தாம்பரம் - இரும்புலியூர் சாலையில் வரும்போது, எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த பயங்கரவிபத்தில் வேன் டிரைவர் கந்தவேல், கிளீனர் ஞானவேல் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்து அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications