தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
காஷ்மீரில் குண்டுவெடிப்பில் 11 பேர் சாவு
ஸ்ரீநகர்:
வடக்கு காஷ்மீரில் பத்தான்என்ற இடத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 11 ஷியா பிரிவு முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.
ஷியா பிரிவு முஸ்லீம்கள் நடத்திய ஊர்வலத்தில் இந்த வெடிகுண்டு வெடித்தது. 16 பேர் காயமடைந்தனர். இவர்களில் ஷியா முஸ்லீம் தலைவர் மெளவி இப்திகார்ஹூசைன் அன்வரும் ஒருவர்.
இப்திகார் ஹுசைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களில் எட்டு பேருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஊர்வலத்திற்கு அன்வர் தலைமை தாங்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த குண்டு வெடித்தது. சம்பவ இடத்திலேயே எட்டு பேர் இறந்தனர். மூன்று பேர்மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் இறந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications