For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இந்தியாவில் மாப்பிள்ளை தேடும் இலங்கை தமிழ்ப் பெண்கள்

கொழும்பு:

இலங்கையை விட்டு இந்தியாவில் மாப்பிள்ளை தேடும் நிலைக்கு இலங்கைத் தமிழ்ப் பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது வெளிநாடு செல்ல விசா கேட்டு தினமும் 400 முதல் 500 தமிழ்ப் பெண்கள் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகி வருகின்றனர்.

இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. உயிரைக் காத்துக் கொள்ள வேண்டியநிலையில், இலங்கையில் இருந்தால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கருதி வெளிநாடு செல்ல இலங்கைத் தமிழ்ப் பெண்கள் முடிவு செய்துள்ளனர்.

இலங்கையில் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் சண்டையில் சுமார் 9 லட்சம் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆகவே,தமிழ்ப் பெண்களுக்கு இலங்கையில் மாப்பிள்ளை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய புள்ளிவிவரப்படி 1000 பெண்களுக்கு 924 ஆண்களேஉள்ளனர்.

ஆகவே, வெளிநாட்டில் வசிக்கும் தனது இனத்தைச் சேர்ந்த மாப்பிள்ளைகளைத் தேடிச் செல்ல விசா கேட்டு இலங்கைத் தமிழ்ப் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X