கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
வடக்கு காஷ்மீரில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆறு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்ப்பட்டனர்.
வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை வடக்கு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் நடந்த தீவிர தேடுதல் வேட்டையின்போது இவர்களைப் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர்.
பாரமுல்லா மாவட்டம், சோபோர் பகுதியில் செரு என்ற கிராமத்தில், வெள்ளிக்கிழமை மாலை நடந்த மோதலில் மூன்று தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
பாரமுல்லா மாவட்டத்தின் தாங்க்மார்க் பகுதியில் புந்திப்போரா கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் சுட்டதில் இரண்டு தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர்.
காசிம் அக்ரம் என்ற தீவிரவாதியை, குப்வாரா மாவட்டம் சோகம் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஆறு ஏ.கே. 47 துப்பாக்கிகள், கிரனேட்கள், வெடிபொருட்கள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications