தமிழகத்தில் இன்று
மூப்பனார் வந்தார்..ராமதாஸ் வரவில்லை..
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியை, சனிக்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்துப் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார்.
திராவிட இயக்க மூத்த தலைவரான முதல்வர் கருணாநிதியின் 77-வது பிறந்த நாள் விழாவை திமுக மூன்று நாள் விழாவாகக் கொண்டாடுகிறது.வெள்ளிக்கிழமை துவங்கிய பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளின் உச்சகட்டமாக சனிக்கிழமை காலை கட்சித் தொண்டர்கள் மத்தியில் முதல்வர் கருணாநிதிதனது பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.
முதல்வரை வாழ்த்த பல்வேறு கட்சித் தலைவர்கள் வந்தனர். திமுக அணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, பா.ஜ.க, எம்.ஜி.ஆர். கழகம்,எம்.ஜி.ஆர்.அதிமுக, ராஜீவ் காங்கிரஸ் போன்ற கட்சித் தலைவர்கள் அனைவரும் நேரில் வந்து பொன்னாடை போர்த்தி முதல்வருக்கு வாழ்த்துத்தெரிவித்தனர்.
அதிமுக அணியில் இடம் பெற்றிருந்தாலும் கூட, தேசிய லீக் தலைவர் அப்துல் லத்தீப், காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் ஆகியோரும் முதல்வருக்கு நேரில்வந்து வாழ்த்துத் தெரிவித்தனர். ஆனால் திமுக அணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க. சார்பில் யாரும் நேரில் வரவில்லை.
பா.ம.க தலைவர் ராமதாஸ் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார். அவரது கட்சியின் சார்பில் எந்தப் பிரமுகரும் நேரில் வந்து முதல்வருக்கு வாழ்த்துக்கூறவில்லை. சனிக்கிழமை காலை சென்னை வந்த பா.ம.கவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்னுச்சாமி கூட முதல்வருக்கு வாழ்த்துச் சொல்லவரவில்லை.
ஆனால், தமாகா தலைவர் மூப்பனார், முதல்வருக்கு வாழ்த்துச் சொல்ல வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. பகல் ஒருமணி வரையில்அவர் அறிவாலயம் வரவில்லை. ஆனால் மாலையில் ஆலிவர் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்குச் சென்று பொன்னாடை அணிவித்து முதல்வருக்குவாழ்த்துச் சொன்னார் மூப்பனார்.