தமிழகத்தில் இன்று
வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து இந்திய, நேபாள அதிகாரிகள் 6-ம் தேதிஆய்வு
டெல்லி:
நேபாள நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து இந்திய, நேபாள அதிகாரிகள் மட்டத்திலான உயர் மட்டக் கூட்டம்காத்மாண்டு நகரில் ஜூன் 6-ம் தேதி துவங்குகிறது.
1992-ம் ஆண்டு இரு நாடுகளின் அதிகாரிகள் கொண்ட நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது. நேபாளத்தில் இந்திய அரசின் உதவியுடன் நடைபெறும் வளர்ச்சித்திட்டப் பணிகளை இக்குழு மேற்பார்வையிட்டு வருகிறது. இக்குழு தற்போது ஐந்தாவது முறையாக கூடி வளர்ச்சித் திட்டப்
பணிகளின் அமலாக்கம் குறித்து ஆராயவுள்ளது.
இந்தியக் குழுவுக்கு பிரதமரின் முதன்மைச் செயலாளர் பிரிஜேஷ் மிஸ்ரா தலைமை வகிப்பார். இரண்டு நாட்களுக்கு இந்தக் கூட்டம் நடக்கும். நேபாளஅணிக்கு அந்நாட்டின் தலைமைச் செயலாளர் தீர்த்தாமன் சக்யா தலைமை வகிப்பார். புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் இக்குழு விவாதிக்கும்.
நேபாளம் செல்லும் பிரிஜேஷ் மிஸ்ரா, மன்னர் பீரேந்திரா, பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா, வெளியுறவுத் துறை அமைச்சர் சக்ரா பிரசாத் பஸ்டோலாஆகியோரையும் சந்திப்பார்.
ஐ.ஏ.என்.எஸ்.