கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
மதிமுகவின் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரணி ஒத்திவைப்பு
சென்னை:
முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து சென்னையில் 5-ம் தேதிமதிமுக சார்பில் நடைபெற விருந்த இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரணிஒத்திவைக்கப்படுள்ளதாக வைகோ அறிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் 5ம் தேதி ஈழத் தமிழர் பாதுகாப்புப்பேரணி நடத்த மதிமுக திட்டமிட்டிருந்தது. இப்பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்றுதமாகா வலியுறுத்தியது.
இலங்கைத் தமிழர் பிரச்சனை என்ற பெயரில் இந்தியாவில் நடை பெறும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக மதிமுக செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்துஅனுமதிக்கக்கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு தமாகா வேண்டுகோள் லிடுத்தது.
இதே போன்ற எதிர்ப்பு காங்கிரஸ், ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகளிடமிருந்தும்கிளம்பியது. இதையடுத்து இப் பேரணிக்கு தமிழக அரசு அனுமதியளிக்குமா என்றகேள்விக் குறி எழுந்தது.
இந் நிலையில் வெள்ளிக்கிழமை கோட்டையில் கருணாநிதியை சந்தித்த செய்தியாளர்கள்,இப் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினார். மதிமுக பேரணிக்குத் தடை விதிக்கவேண்டும் என்று எதிர்க் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இப் பேரணியை அரசுஅனுமதிககுமா அல்லது தடைவிதிக்குமா என்று கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த முதல்வர் ஒரு விஷயம் பிரச்சனைக்குரியதாக ஆக்கப்படுகிறபோதுஅதை தவிர்த்து விடுவதுதான் நல்லது. இதை எனது பிறந்த நாள் செய்தியாக எடுத்துக்கொள்ளலாம் என்று வைகோவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்று தமது கட்சியின் பேரணியை ஒத்தி வைத்துள்ளதாக, முதல்வரின் பிறந்த நாள்விழாவில் பங்கேற்ற போது வைகோ தெரிவித்தார்.
முதல்வர் கருணாநிதியின் 77வது பிறந்த நாள் விழா சனிக்கிழமை திமுக தலைமைஅலுவஸகமான அண்ணா அறிவாலயத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமது கட்சியின்மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், ஆகியோருடன் வந்தார்.
அண்ணனுக்கு தம்பி தெரிவிக்கும் பாசம் நிறைந்த வாழ்த்துக்கள் என்று முதல்வர்கருணாநிதிக்கு பொன்னாடை அணிவித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினார் வைகோ.
பின்னர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேரணி ஒத்திவைப்பு அறிவிப்பைவெளியிட்டார். அந்த அறிவிப்பில் வைகோ கூறியதாவது:
சிங்கள அரசின் இனப் படுகொலைக்கு ஆளாகி எண்ணற்றத் துன்பங்களால்பாதிகக்ப்படடு, போராடும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு குரல் எழுப்பவும், இந்தபிரச்சனையில் ஈழத் தமிழர் நலனுக்கு எந்த விதத்திலும் குந்தகம் ஏற்படாத வகையில்வாஜ்பாய் அரசு கடைபிடிக்கும் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தும் 5ம் தேதி சென்னையில்பேரணி நடத்த மதிமுக முடிவு செய்திருந்தது.
தற்போது இப்பிரச்சனையில் முதல்வர் தனது பிறந்தநாள் செய்தியாக தெரிவித்த கருத்துக்குமதிப்பளித்து பேரணியை மதிமுக ஒத்தி வைக்கிறது. ஈழத் தமிழர் பிரச்சனையில்மதிமுகவின் நிலைப்பாட்டிலும், அணுகுமுறையிலும் எந்த வித மாற்றமும் இல்லை.
இவ்வாறு வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications