தமிழகத்தில் இன்று
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு
மணிலா:
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில்ஞாயிற்றுக்கிழமை காலை சக்தி மிக்க குண்டு வெடித்தது. இதனால், விமான நிலையக்கட்டடத்துக்குப் பெரும் சேதம் ஏற்பட்டது. மேலும், அங்கிருந்த பொதுக் கழிப்பிடம்முற்றிலும் தரைமட்டமானது.
குண்டுவெடிப்பால் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்று விமான நிலைய அதிகாரிகள்தெரிவித்தனர்.
விமான நிலையத்தில், பயணிகளை வரவேற்க உறவினர்கள் காத்திருக்கும் பகுதிக்குசில மீட்டர் தூரத்தில் உள்ள பெண்கள் கழிப்பிடத்துக்கு மிக அருகில் குண்டு வெடித்தது.இதனால், கழிப்பிடம் முற்றிலும் சேதமடைந்தது. குண்டு வெடிப்பால், விமானநிலையத்தில் இருந்த கண்ணாடிக் கதவுகள் சேதமடைந்தன.
உறவினரை வரவேற்கக் காத்திருந்த ஒரு பெண்ணிடம் இரு நபர்கள் வந்துதங்களிடமிருந்து இரு கார் ஸ்டீரியோக்களை வைத்துக் கொள்ளும்படி கூறினர்.ஆனால், அவற்றை வாங்கிக் கொள்ள அப் பெண் மறுத்துவிட்டார். இதையடுத்து அந்தகார் ஸ்டீரியோக்களை பெண் கழிப்பிடத்துக்கு அருகே வைத்துவிட்டு இருவரும்சென்றுவிட்டனர். அந்த கார் ஸ்டீரியோக்கள் தான் வெடித்திருக்கவேண்டும் என்றுபோலீஸார் கருதுகின்றனர்.
இது தொடர்பாக, குண்டு வெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் விமான நிலையத்திலிருந்துவெளியே செல்ல முயன்ற இருவரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த குண்டு வெடிப்புக்கும், முஸ்லீம் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மணிலாவில் கடந்த ஒரு மாதத்தில் நடைபெறும்5-வது குண்டு வெடிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications