தமிழகத்தில் இன்று
புலிகளின் அகண்ட தமிழகத்தை ராமதாஸ் ஏற்றுக் கொள்வாரா - வாழப்பாடி கேள்வி
சென்னை:
விடுதலைப் புலிகளின் அகண்ட தமிழகம் கொள்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றுக் கொள்வாரா என்றுதமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கேள்வி எழுப்பினார்.
சென்னையில் நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
எனக்கு விடுதலைப் புலிகளைத் தெரியாது. மிருகக்காட்சிச் சாலையில் உள்ள புலிகளைத் தான் பார்த்திருக்கிறேன்.ஆனால், விடுதலைப் புலிகளின் கொள்கைகளை ஆதரிக்கிறேன் என்று சேலத்தில் ராமதாஸ் கூறியுள்ளார்.
புலிகளுக்கு இரு கொள்கைகள், ஒன்று தமிழ் ஈழம், மற்றொன்று அகண்ட தமிழகம். யாழ்ப்பாணம்,திரிகோணமலை, தமிழகம் உள்ளிட்டக்கியதுதான் அகண்ட தமிழகம். இதை ராமதாஸ் ஏற்கிறாரா என்பதைத்தெளிவுபடுத்தவேண்டும்.
சேலம் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வகணபதி (அதிமுக) மீதான ஊழல்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனவேபதவியில் நீடிக்க அவர் தகுதி இல்லாதவர். தார்மீக அடிப்படையில் அவர் பதவி விலக வேண்டும். சேலம்நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தவேண்டும் என்றார் வாழப்பாடி.












Click it and Unblock the Notifications