தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

அமைதிப் பேச்சுவார்த்தையை புலிகள் நிராகரித்துவிட்டனர் - அதிபர் சந்திரிகா குமாரதுங்கா

கொழும்பு:

அமைதிப் பேச்சுவார்த்தையை விடுதலைப் புலிகள் நிராகரித்து விட்டனர் என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காதெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:

இலங்கையில் 17 ஆண்டுகளாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு முயற்சித்து வருகிறது. ஆனால், பேச்சுவார்த்தையைபுலிகள் நிராகரித்து விட்டனர்.

இருப்பினும், வேறு வகையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாண தீபகற்பத்தில் நடைபெறும் போர்தான் பேச்சுவார்த்தைக்குத் தடையாக இருப்பதாக நான் நினைக்கவில்லை.புலிகள் தான் வேண்டுமென்றே பேச்சுவார்த்தைக்கு எதிராக இருக்கின்றனர்.

கடந்த 6 ஆண்டுகளாக புலிகளுடன் பேச்சு நடத்த நான் முயற்சித்தேன். ஆனால், 6 ஆண்டுகளாக அவர்களும் பேச்சுவார்த்தைக்கு வராமல்பல்வேறு பொய்க் காரணங்களைக் கூறி வருகின்றனர். இனி எதிர்காலத்தில் புலிகளுடன் பேச்சு நடந்தால் அது சிலநிபந்தனைக்குட்பட்ட பேச்சுவார்த்தையாகத் தான் இருக்கும். என்ன நிபந்தனைகள் என்பதைக் கூறமுடியாது.

குறிப்பிட்ட கால நிர்ணயித்துக்குள் புலிகளுடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்பட்டது. புலிகளும் எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வோம் என்று அறிவித்தனர். ஆனால், அவர்கள் அவ்வாறுசெய்யாமல் பேச்சு வார்த்தையைப் புறக்கணித்தனர். இப்போது, தங்களுடைய சில நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வோம் என்று அறிவித்துள்ளனர்.

நார்வே நாட்டு சமரசத்துடன் புலிகளுடன் பேச்சு நடத்த இலங்கை அரசு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டது. ஆனால்,அதையும் புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இலங்கை இனப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு புதிய அரசியலமைப்புச் சட்டத்தைஉருவாக்குவதுதான் ஒரே வழி என்ற கருதுகிறேன். அதற்கான நடவடிக்கையில் நான் ஈடுபட்டுள்ளேன். இதற்கு புலிகளின் சம்மதம்தெரிவித்தாலும், தெரிவிக்காவிட்டாலும் நான் தொடர்ந்து அந்த முயற்சியில் ஈடுபடுவேன்.

எனது புதிய அரசியலமைப்புத் திட்டம் குறித்து எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சு நடத்தி வருகிறேன். நாடாளுமன்றத்தேர்தல் குறிப்பட்ட நேரத்தில் நடைபெற வசதியாக ஒரு குறிப்பிட்ட கால நிர்ணயித்துக்குள் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.தேர்தல் எக்காரணம் கொண்டும் ஒத்திவைக்கப்படாது என்றார் சந்திரிகா குமாரதுங்கா.

அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் புதிய அறிவிப்பு பற்றி புலிகள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை.

பிரிட்ஜ் நியூஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+