தமிழகத்தில் இன்று
105-வது பிறந்த நாள்: காயிதே மில்லத் சமாதியில் கருணாநிதி, ஜெ. அஞ்சலி
சென்னை:
மறைந்த காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்பின் 105---வது பிறந்த நாளை ஒட்டிசென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் கருணாநதி, அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா, மதிமுக தலைவர் வைகோ, தமிழக காங்கிரஸ்தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்தவர்காயிதே மில்லத். அவர் 1972ம் ஆண்டு மறைந்தார். சென்னை திருவல்லிக்கேணிவாலாஜா பெரிய பள்ளிவாசலில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை, காயிதே மில்லத்தின் 105வது பிறந்த நாள். அதையொட்டி தமிழகமுதல்வர் கருணாநிதி காலை 8.55 மணிக்கு அவரது நினைவிடம் வந்தார். காயிதேமில்லத்தின் சமாதியில் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, காயிதேமில்லத் சமாதியில் மலர் போர்வை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.
காலை 10.30 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வந்தார். அவருடன்அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் காளிமுத்து, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர்வந்தனர். காயிதே மில்லத் சமாதியில் ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார்.
11 மணியளவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காயிதே மில்லத்திற்கு அஞ்சலிசெலுத்தினார். எம்ஜிஆர் அதிமுக சார்பில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் அஞ்சலிசெலுத்தினர்.