தமிழகத்தில் இன்று
ஜூ-ன்05, 2000
பாஞ்சாலி சபதம்
(தொடர்ச்சி)
4. துரியோதனன் சபை
கன்னங் கரியது வாய் - அகல்
காட்சிய தாய்மிகு மாட்சிய தாய்,
துன்னற் கினியதுவாய் - நல்ல
சுவை தரும் நீருடை யமுனையெ னும்
வன்னந் திருநதி யின் - பொன்
மருங்கிடைத் திகழ்ந்த அம் மனிநக ரில்,
மன்னவர் தங்கோ மான் - புகழ்
வாளரவக் கொடி யுயர்ந்து நின்றான். (15)
துரியோ தனப் பெயரான் - நெஞ்சத்
துணிவுடையான், முடி பணிவறி வான்
கரியோ ராயிரத் தின் - வலி
காட்டிடுவான் என்றக் கவிஞர்பி ரான்
பெரி யோன் வேதமுனி -அன்று
பேசிடும் படிதிகழ் தோள்வலி யோன்,
உயியோர் தாமெனினும் - பகைத்
குரியோர் தமக்குவெந் தீயனையான். (16)
தந்தைசொல் நெறிப்படியே -இந்தத்
தடத்தோன் மன்னவன் அரசிருந்தான்.
மந்திர முணர்பெரியோர் - பலர்
வாய்த் திருந்தார் அவன் சபைதனி லே.
அந்தமில் புகழுடை யான் - அந்த
ஆரிய வீட்டுமன். அறம்அறிந் தோன்.
வந்தனை பெறுங்குர வோர் - பழ
மறைக்குள் மறவர்கள் இருவரொடெ. (17)
மெய்ந்நெ யுணர்விது ரன் - இனி
வேறுபல் அமைச்சரும் விளங்கி நின்றார்
பொய்ந்நெறித் தம்பியரும் - அந்தப்
புலைநடைச் சகுனியும் புறமிருந்தார்
மைந்நெறி வான்கொடையோன் - உயர்
மானமும் வீரமும் மதியுமு ளோன்
உய்ந்நெறி யறியான் தான் - இறைக்கு
உயிர்நிகர் கன்னனும் உடனிருந்தான். (18)
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!