தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

அம்மன் கண்ணில் கண்ணீர்: பாண்டியில் பரபரப்பு

சென்னை:

பாண்டிச்சேரி அருகில் சின்ன கோட்டக் குப்பத்தில் உள்ள கோயிலில் அம்மன் சிலை கண்ணீர் வடிப்பதாக பரவியதகவலை அடுத்து அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பாண்டிச்சேரி அருகே சின்ன கோட்டக்குப்பம் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள தென்னந்தோப்பில் 10ஆண்டுகளுக்கு முன்பு புற்று உருவானது. நாளாக நாளாக அந்த புற்று வளர்ந்தது. உடனே அப்பகுதி மக்கள் அந்தபகுதியில் கோட்டை அமைத்து கோயிலாக வழிபட ஆரம்பித்தனர். வெள்ளிக் கிழமைகளில் முட்டை, பால் அளித்துவணங்கி வந்தனர்.

இப்புற்றுக் கோவிலில் 2 அடி உயர நாகாத்தம்மன் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்தனர். பின்னர் இக்கோயிலைச்சுற்றியுள்ள கிராமங்களில் பிரபலமானது. முத்தியால்பேட்டை மார்க்கெட்டுக்கு காய்கறி வியாபாரம் செய்யச்செல்லும் பெண்கள், ஆண்கள் என எல்லோரும் இக்கோயிலில் வழிபட்டு விட்டு தான் செல்வது வழக்கமானது.

இந்நிலையில் இந்த கோயிலில் உள்ள நாகாத்தம்மன் சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதாக தகவல்பரவியது. துடைக்க துடைக்க நீர் கசிவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

அம்மனுக்கு என்ன குறையோ தெரியவில்லையே என்று அக்கிராம மக்கள் கவலையோடு குறிப்பிடுகின்றனர்.அம்மன் சிலை கண்ணீர் வடிக்கும் தகவல் தெரிந்து கோட்டக்குப்பம், நடுக்குப்பம், சோதனைக்குப்பம்,கருவடிக்குப்பம், கோட்டைமேடு, முத்தியால்பேட்டை, சோலைநகர், இந்திராநகர் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்துபக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+