தமிழகத்தில் இன்று
வறுமை ஒழிப்புத் திட்டங்கள்: இந்தியாவுக்கு சர்வதேச நிதியம் பாராட்டு
டெல்லி:
வறுமை ஒழிப்புக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இந்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்.) பாராட்டுதெரிவித்துள்ளது.
சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் ஹார்ஸ்ட் கோலர், மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது,இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
வளரும் நாடுகளில் தாராளமயமாக்கல் கொள்கையை அமல்படுத்துவது, சர்வதே நிதி நிலைமையை நிலைப்படுத்துவது போன்ற பல்வேறு சர்வதேசவிஷயங்கள் பற்றி இரு தலைவர்களும் பேசினர்.
நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு திட்டங்களை கோலரிடம் சின்ஹா எடுத்துரைத்தார். உலக நிதி அமைப்பில் சர்வதேச நிதியம்ஒரு முக்கிய அங்கமாக வளர இந்தியா உதவவேண்டும் என்று கோலர் கேட்டுக் கொண்டார்.
வறுமை ஒழிப்பு, பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்ற துறைகளில் இந்திய அணி மேற்கொண்டுள்ள முயற்சிகள்பாராட்டுதற்குரியவை. அவற்றுக்கு சர்வதேச நிதியத்தின் ஆதரவு எப்போதும் உண்டு என்றார் கோலர்.
யு.என்.ஐ.