அதிமுகவுக்கு மேலும் இரு பொதுச் செயலாளர்கள்

Subscribe to Oneindia Tamil

உள்நாட்டுப் போர் ஒருபுறம்...தீராத வறட்சி மறுபுறம்...

இஸ்லாமாபாத்:

உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் கடந்த 30 வருடமாக இல்லாத வறட்சி தற்போது நாடு முழுவதும் பரவி அங்கு வாழும்2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. சபை கூறியுள்ளது.

ஐ.நா.வின் மனிதநேய உதவிக் குழுவின் தற்காலிக ஒருங்கிணைப்பாளர் சையத் அமீர் பராக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் எதிர்பார்த்ததைவிடவறட்சி மிக மோசமாக உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானைக் கடுமையாகப் பாதித்த இந்த வறட்சி, இப்போது, ஆப்கானிஸ்தானின் தென்மேற்குப்பகுதியையும் பாதித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதும் இந்த வறட்சியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டிலுள்ள வடக்குப் பகுதியில் செழித்து வளரும் பயிர்கள்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்போதிருந்து, 2001 ம் ஆண்டு ஜூன் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களில் பாதிப்பேர் வறட்சியால் பாதிப்படைவார்கள் என்று ஐநாபுள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. இங்குள்ள மக்கள் தொகையில் 30 முதல் 40 லட்சம் பேர் வரை மிகக் கடுமையான வறட்சியாலும், மீதியுள்ள 80 முதல்1.2 கோடி வரை லேசான வறட்சியாலும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அந்தப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை வறட்சியால் யாரும் இறக்கவில்லை. உறுதிப்படுத்தப்படாத செய்திகள்படி சில இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. கடந்த இருபதுவருடங்களாக வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மழையை நம்பி வாழும் விவசாயிகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். நிலநடுக்கம், வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்பு, முற்றுப்பெறாத உள்நாட்டுப்போர்ஆகியவற்றால் ஆப்கானிஸ்தானில் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+