ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
ஸ்பீட் ஆதரவாளர்களைக் கலைக்க பிஜி ராணுவம் துப்பாக்கிச் சூடு
சுவா:
பிஜி தலைநகர் சுவாவில் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்ளிட்ட 31 பேர் சிறை வைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் கூடியபுரட்சிக்காரர்களின் ஆதரவாளர்களைக் கலைக்க பிஜி ராணுவ வீரர்கள் எச்சரிக்கைக்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடைந்ததாகத் தெரியவில்லை என்று பிஜி ரேடியோ செய்தியில் கூறப்பட்டது. எச்சரிக்கைக்காகவே இந்த துப்பாக்கிச் சூடுநடந்ததாக சம்பவ இடத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வருவோம்: ராணுவம்
இதற்கிடையே, பிஜியில் ஜனநாயகத்தை மீண்டும் மலரச் செய்வோம் என ராணுவம் கூறியுள்ளது.
காமன்வெல்த் அமைப்பிலிருந்து பிஜி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், ராணுவச் செய்தித் தொடர்பாளர் பிலிப்போ தாராகினிகினி செய்தியாளர்களிடம்கூறுகையில், பிஜியில் விரைவில் ஜனநாயகம் மலரும். காமன்வெல்த் நாடுகளின் பிரதிநிதிகளிடம் இதைச் சொல்வோம்.
பிஜியில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதே, அங்கு ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான்.
அடுத்த மூன்று மாதங்களில் பிஜியில் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதற்காக ராணுவத் தளபதி பிராங்க் பைனிமராமா தீவிர ஆலோசனையில்ஈடுபட்டுள்ளார் என்றார் தாராகினிகினி.
மே 19-ம் தேதி ஸ்பீட் தலைமையிலான புரட்சிக்காரர்கள் பிஜியில் ஆட்சியைப் பிடித்தனர். பிரதமர் உள்ளிட்ட பலர் சிறை பிடிக்கப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications