ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்

Subscribe to Oneindia Tamil

சாலமன் தீவுகள்: மலத்தியன் தீவிரவாதிகள் சுட்டு 100 இஸதாபு தீவிரவாதிகள் சாவு

பிரிஸ்பேன்:

இஸதாபு சுதந்திரப் போராட்ட அமைப்பு என்ற தீவிரவாத குழுவைச் சேர்ந்த 100 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று விட்டதாக, சாலமன் தீவுகளில்புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்துள்ள மலத்தியன் ஈகிள்ஸ் தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை சாலமன் தீவுகளில் புரட்சி மூலம், இந்த தீவிரவாதிகள் ஆட்சியைப் பிடித்தனர். பிரதமர் பார்த்தோலோமியூ உலுபா ஆலு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இந்த நிலையில் தங்களது பரம எதிரியான இஸதாபு தீவிரவாதிகளில் 100 பேரைக் கொன்றுள்ளதாக மலத்தியன் ஈகிள்ஸ்தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் ஹோனியராவிலுள்ள போலீஸ் ஆயுதக் கிட்டங்கிக்குள் புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்த துப்பாக்கிகள் பொருத்திய படகுகள்மற்றும் பிற ஆயுதங்களைக் கைப்பற்றினர். பின்னர் ஹோனியராவின் புறநகரில் கடல் பகுதியில் ரோந்து சுற்றக் கிளம்பினர்.

ஆட்சிப் பொறுப்பில் உள்ள தீவிரவாதிகளின் தலைவர் ஆண்ட்ரூ நோரி ஹோனியராவிலிருந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசியில் அளித்தபேட்டியில், புதன்கிழமை காலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு ) துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட இயந்திரப் படகில் மலத்தியன்தீவிரவாதிகள் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, இஸதாபு தீவிரவாதிகளின் படகுகள் அங்கு வந்துள்ளன. இதையடுத்து அவர்கள் மீதுசரமாரியாக சுட்டுள்ளனர். இதில் 50 முதல் 100 பேர் வரை அங்கேயே இறந்தனர்.

ஹோனியராவின் கிழக்குப் பகுதியிலுள்ள இஸதாபு தீவிரவாதிகளின் மறைவிடங்கள் மீது புதன்கிழமை பிற்பகலுக்கு மேல் தாக்குதல் நடத்தி அதையும்பிடிப்போம். இதனால் அப்பகுதியிலும் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நம்புகிறோம் என்றார் நோரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+