தமிழகத்தில் இன்று
டெல்லியில் கிறிஸ்தவ சகோதரர் படுகொலை
டெல்லி:
டெல்லியில் கிறிஸ்தவ சகோதரர் படு கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்டவர் அருட் சகோதரர் ஜார்ஜ். 35 வயதாகும் இவர் பொரிவிலி ஆர்டரைச் சேர்ந்தவர். மதுரா பைபாஸ் சாலையிலுள்ள அட்விகி போஸ்ட்பகுதியில், நவேதா என்ற இடத்தில் அவர், கிறிஸ்தவ மிஷன் இல்லத்தில் வசித்து வந்தார். அவரது உடல் வீட்டில் கொலையுண்ட நிலையில் புதன்கிழமைகண்டுபிடிக்கப்பட்டது. வீட்டு வேலைக்காரர், ஒரு அறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கொலைக்கான காரணமும், கொலையாளிகள் யார் என்பதும் தெரியவில்லை.
மதுராவிலுள்ள கோசி கல்யாண் பகுதியில் இந்த ஆண்டுத் துவக்கத்தில் மதக் கலவரம் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட பகை காரணமாக இப்போதுசகோதரர் ஜார்ஜ் பழி வாங்கப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை இரவு ஜார்ஜ் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரைக் கொன்று விட்டு, வீட்டு வேலையாளை அறைக்குள்வைத்துப் பூட்டி விட்டுத் தப்பியிருக்கலாம் என்று ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்திருபபதாக போலீஸார் தெரிவித்தனர்.
கொலை நடந்த நவேதா பகுதிக்கு ஆர்ச்பிஷப் விரைந்துள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications