கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
கொழும்பு:
சிதைந்து கிடக்கும் மனித வெடிகுண்டின் உடல். | கொழும்பில், புதன்கிழமை நடந்த மனித வெடிகுண்டு விபத்தில் அமைச்சர் குணரத்தினே கொல்லப்பட்டசம்பவம் தொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பு புறநகரான ரத்மலனா பகுதியில் மொரட்டுவா சந்திப்பில் நடந்த போர் வீரர் நினைவு தினப்பேரணியின்போது அமைச்சர் குணரத்தினே, மனித வெடிகுண்டுக்குப் பலியானார். அவருடன் 23 பேரும்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வானொலிச் செய்தியில் கூறியுள்ளது. |
விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குப் பலியாகியுள்ள அதிபர் சந்திரிகாவின் முதல் அமைச்சர் குணரத்தினேஎன்பது குறிப்பிடத்தக்கது. 65 வயதாகும் குணரத்தினே, அதிபருக்கு மிகவும் நெருக்கமானவர்.
தாடி வைத்த நபர்:
மனித வெடிகுண்டாக வந்த நபர் தாடி வைத்திருந்ததாகவும், பேரணி நடந்த இடத்தில் சாலையோரம்நின்றிருந்ததாகவும், சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்தனர். அமைச்சர் அங்கே வந்தபோது,அவரை நெருங்கி கட்டிப்பிடித்துள்ளார். அதன் பிறகு வெடிகுண்டை இயக்கி வெடிக்க வைத்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அமைச்சரின் மனைவி சியாமா, கவலைக்கிடமான நிலையில்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த 60 பேரில் ஏழு பேருடைய நிலை மோசமாக உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மனித வெடிகுண்டுக்கு அமைச்சர் பலியானதைத் தொடர்ந்து கொழும்பு நகரில போலீஸ் மற்றும்ராணுவம் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் தெருக்களில்நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications