தமிழகத்தில் இன்று
2 கு-ழந்-தை-க-ளை கொன்-று தா-யும் தற்-கொ-லை
கோவை:
குடும்பத் தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளையும் கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டாள்.
கோவை சீராநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ரமா. இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உண்டு. இந்-நிலையில்கணவன் மனைவிக்கிடையே அடிக்கடித் தகராறு ஏற்படுவதுண்டு. இந்த சண்டையில் -நடராஜன் வீட்டை விட்டு வெளியேறுவதாகக் கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார். இரண்டு -நாட்களாகியும் கணவன் வீடு திரும்பாததை எண்ணி மனைவி ரமா வேதனைப் பட்டுள்ளார்.
பின்னர், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் குழந்தைகள் அனாதையாகி விடும் என எண்ணி, அக்குழந்தைகளை கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கினார்.
இன்று காலை வெகு-நரமாகியும் வீடு திறக்காததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.
அப்போது 3 பேரும் இறந்து கிடந்தது தெரிந்தது. தகவல் கிடைத்த கணவர் நடராஜன் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். பின்னர் போலீசில் புகார் தெ-ரிவிப்பதாகக்கூறிவிட்டுச் சென்று விட்டாராம்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications