கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Subscribe to Oneindia Tamil

வைகோ, ராமதாஸ் பேச்சு-க-ளும் பார-தீ-ய ஜன-தா-வும்

மதுரை:

இலங்கைப் பிரச்சினை குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவும், பா.ம.க.வும் கூறும் கருத்துக்களால் கூட்டணிக்குப் பாதிப்புஏதும் ஏற்படாது என்று தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் கிருபாநிதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது என்று பிரதமர் வாஜ்பாய்தெளிவாகக் கூறியுள்ளார்.

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும், தங்களது கருத்துக்களை வெளிப்படையாகக் கூறலாம். அதைத் தடை செய்ய முடியாது. வைகோவும், ராமதாஸ்விவகாரத்திலும் அதுவே நிலைமை. இருப்பினும் தங்களது கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட வேண்டாம் என்று இரு கட்சியனரையும் பிரதமர் வாஜ்பாய்மீண்டும், மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார். கேபினட் கூட்டத்திற்கு முரண்பாடான வகையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்றும்அவர்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை விவகாரத்தில் பிரதமரின் நிலைக்கு தமிழக பா.ஜ.க. முழு ஆதரவு தெரிவிக்கிறது. இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பக் கூடாது என்ற மத்தியஅரசின் முடிவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம். இருப்பினும் மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் வழங்குவது போன்ற மனிதாபிமானஉதவியை இந்தியா செய்யலாம் என்றார் கிருபாநிதி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+