தமிழகத்தில் இன்று
-இ-றந்-த-வ-ரின் ப-ணத்-தை மோச-டி செய்-த எல்.ஐ.சி. ஊழியர்
டெல்லி:
போலி தஸ்தாவேஜூகள் தயாரித்து இறந்து போன ஒருவரின் பணத்தை எல்.ஐ.சியி-லி-ருந்-து பெற்ற முன்னாள் எல்.ஐ.சி. ஊழியருக்கு சிபிஐசிறப்பு நீதிமன்றம் மூன்று வருடக் கடுங்காவல் தண்டனையும், ரூ 13 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.
இதுபற்றிக் கூறப்படுவதாவது:
இட்டார்சியில் வசித்து வருபவர் எஸ்.பி.பர்கூர். இவர் எல்.ஐ.சியில் பணி-யாற்-றி வ-ந்தார். இவர் இறந்த போன ஒருவரின் பெயரில் உள்ளபாலிஸியை தவறாக உபயோகித்து லட்சக்கணக்கில் அவரது பணத்தை பெற முயன்றார். அதற்காக இவர் இறந்தவர் பெயரில்போலி தஸ்தாவேஜூகள் தயாரித்து தனக்கு அந்தப் பணத்தைக் கொடுக்கும்படி இட்டார்சியிலுள்ள ஆயுள்காப்பீட்டுக்கழகப்பொதுமேலாளருக்குக் கடிதம் எழுதினார்.
பின்னர் தேவைப்-பட்-ட இடங்களில் எல்-லாம் போலிக் கையெழுத்துப் போட்டு இட்டார்சியிலுள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் 7முறை பணம் எடுத்தார்.
பணம் எடுத்த சில மாதங்களில் அவர் போலி தஸ்தாவேஜூகள் தயாரித்திருக்கிறார் என்றும், அவரே இறந்து போனவருக்கு எல்ஐசிபாலிசி தொடங்கிக் கொடுத்ததாகவும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்னாள் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வேலை பார்த்து வந்தபர்கூருக்கு 3 வருடக் கடுங்காவல் தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது.
யு.என்.ஐ.