சிட் பண்ட் மோசடியா? -ம-ழுப்-பு-கி-றார் மனோஜ் பிரபாகர்
இ-னி இந்-தப் ப-கு-தி-யில் வாரந்-தோ-றும் சின்-னத்-தி-ரை நட்-சத்-தி-ரங்-கள் தங்-க-ளுக்-கு பிடித்-த டாப் 10 பற்-றி நம்-மு-டன் பகி-ர்ந்-து கொள்-வார்-கள்.
தமிழ்,தெலுங்கு ,கன்னடம்,மலையாளம் என்று அறுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் -நடித்தவர். "ஒ-ரு பெண்-ணின் -க-தை" டி.விதொடரின் மூலமாக தமிழ் தொலைக்காட்சி நேயர்களின் மனதில் தனக்கென ஒரு -இடத்தைப் பிடித்துக்கொண்டவர் மோகினி. தனக்குபிடித்த டாப் 10 விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
1. உறவுகள்: அப்பா,அம்மா,பரத், அனிருத் இப்படி சொல்லிகிட்டே போகலாம். அப்பா, அம்மா எல்லாம் கடவுளுடைய பரிசு. பரத், நல்ல நண்பர், தத்துவவாதி, குரு, பிறகு தான் அவர் என் கணவர்.வீட்டுல வாங்க போங்க மரியாதையாயெல்லாம் கூப்பிடறது இல்லை. ரொம்ப காஷூவல். ரொம்ப அன்டர்ஸ்டான்டிங். நல்ல நண்பர் அவர். அனிருத்.. என் -நான்கு மாத குழந்தை. இப்பொழுதைக்கு என் உலகமே இவன் தான்.
2. தொழில்: ஒவ்வொருவருக்குமே, செய்கின்ற தொழில் என்பது மிக முக்கியமானது. அதில் -நசம், ம-ரியாதையுடன் செய்வது ரொம்ப ஆரோக்யமான விஷயம். ஐ லவ் மை ப்ரோபஷன்.
3. நண்பர்கள்: எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு. என் கணவரின் -நண்பர்கள் அனைவருமே எனக்கு -நண்பர்கள் தான். என் -நண்பர்களில் என் -முதல் -நண்பர் என் கணவர் பரத் தான். பொதுவாகவே -நண்பர்கள்னா தண்ணியடிக்கிறது, ஊர் சுத்தறது, சந்தோஷங்களை பகிர்ந்து கொள்பவர்கள் மட்டும் நண்பர்கள் இல்லை. துக்கம் ,கஷ்டத்திலும் பங்கு கொள்பவர்களே உண்மையான நண்பர்கள்.
4. உணவு: வீட்டுச்சாப்பாடு தான் பிடிக்கும். பேக் வெஜிடபிள், பேபி கார்ன் பிடிக்கும். இதையெல்லாம் விட என் ஹஸ்பண்ட் செய்கின்ற ஆம்லேட் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
5. அனிருத்: என் நான்கு மாத குழந்தை. இவன் செய்கின்ற எல்லா சேட்டைகளுமே பிடிக்கும். எந்த ஒரு நாத்திகனும் கடவுளை -நம்புகின்ற ஒரே இடம்.. குழந்தை. குழந்தை பிறப்பது என்பது --நம்-பிக்கையில் இல்லை..அது ஒரு வரம். கல்யாணம் ஆனவுடனே இப்ப குழந்தை வேண்டாம் நாலுவருஷம் கழிச்சு பெத்துக்கலாம்ன்னு நினைக்கிறதெல்லாம் புத்திசாலித்தனமான விஷயமில்லை. குழந்தை வரும் பொழுது தக்கவைத்துக்கொள்ள தெ-ரியவேண்டும்.
6. நகைகள்: ரொம்ப பிடிக்கும். குட்டிகுட்டியா நிறைய நகைகள் சேர்த்து வச்சிருக்கேன். ஒரே நேரத்தில் -நிறைய-நகைகள் போட்டுக்க பிடிக்காது.
7. டிரஸ்: ஜீன்ஸ், டீ சர்ட்ஸ் பிடிக்கும். ட்டில் எப்பொழுதும் சார்ட்ஸ் தான். ரெளடி மாதிரி. அப்புறம் காஞ்சிபுரம் பட்டு , ரொம்ப மரியாதையா யார்வீட்டுக்கும் போகணும்னா சல்வார் காமிஸ் போட்டுப்பேன்.
8. பொழுதுபோக்கு: பொழுதுபோக்கு என்பது வெளியே சாதரணமானது தான். அதையும் உருப்படியா செய்யணும்னு ஆசைப்படுவேன். கடந்த பத்து வருஷமா நடிப்புதான் தொழிலாகவும், பொழுதுபோக்காகவும் இருந்தது. மலையாளத்துல தான் -நிறைய சினிமா பண்ணியிருக்கேன். தமிழ் சினிமா உலகத்தில், ஒரு கர்ச்சீப்பைக்கொடுத்து டிரஸ்ஸாபோட்டு நடிங்கன்னு சொல்லிடுவாங்க. மலையாள திரையுலகில் கொஞ்சம் சின்சியா-ரிட்டி, டிசிப்ளின் உண்டு. சும்மா தண்ணியடிச்சுட்டு ஊர்சுத்தறது , சிகரெட் பிடிக்கறது பொழுது போக்குன்னு சொல்லுவாங்க, கோவிலுக்குபோகிறது, சமைக்கிறது, படிக்கிறது, டி.விபார்கிறது கூட நல்ல பொழுது போக்குதான். இப்பத்தான் கொஞ்சம் என்ஜாய் பண்ண ஆரம்பிச்சிருக்கேன்.
9. ஹாபிஸ்: புத்தகம் படிக்கிறது, யோசிப்பது, ஜோக்ஸ் அடிப்பது (நான் நல்ல ஜோக்ஸ் அடிப்பேன்) விளையாட்டு இவைகள் தான்.
10. மதநம்பிக்கை: எல்லா மதமும் பிடிக்கும். எல்லா மதங்களும் நல்ல வழிகளையே காட்டிக்கொண்டிருக்கின்றன. எனக்கு ரொம்ப சுத்தமா இருக்கணும். குளிக்காம பூஜை அறைக்கு போகக்கூடாது. குளிச்சுட்டுத்தான் கோயிலுக்கு போகணும் இப்படியுள்ள பல கட்டுப்பாடுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். காரணம் அதில் சுத்தத்தைத்தான் சொல்கிறார்கள் என்-றார் நடி-கை -மே-ா-கி-னி.