தமிழகத்தில் இன்று
"மூப்-ப-ன-ார் கையில் தான் எல்-லாம்"...த-மி-ழ-க காங்-கி-ரஸ் -பு-தி-ய -த--லை-வர் பேட்-டி
சென்னை:
காங்கிரஸ் - த.மா.கா. இணைப்புக்கு முயற்சிப்பேன் என்று தமிழக காங்கிரசின் புதிய தலைவராகநியமிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
டெல்லியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
காங்கிரசுடன் த.மா.கா இணைய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏற்கனவே அழைப்புவிடுத்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நான், அதற்கான முயற்சிகளில்ஈடுபடுவேன். ஆனாலும், அது நிறைவேறுவது மூப்பனார் கையில் தான் உள்ளது.
சோனியா காந்தி என்னிடம் கட்சி வளர்ச்சிக்கு பல்வேறு யோசனைகள் கூறி இருக்கிறார். குறிப்பாககட்சியில் உள்ள அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.அவருடையவிருப்பப்படி நான் செயல்படுவேன்.
என்மீது பல்வேறு புகார்களை திண்டிவனம் ராமமூர்த்தி கூறி இருக்கிறார். அதை நான்பொருட்படுத்தவில்லை. அவர் தொண்டர்களே இல்லாத ஒரு தனி மனிதர்.
நான் கட்சியை பலப்படுத்துவதில் அதிக அக்கறை செலுத்துவேன், முன்னாள் தலைவவர்கள் எம்.பி.சுப்ரமணியம், குமரி அனந்தன், பிரபு ஆகியோருடன் கலந்து பேசி கட்சிப் பணிகளில் ஈடுபடுவேன்.இவர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு தரவதாக கூறியுள்ளனர்.
எனக்கு தலைவர் பதவி கிடைப்பதற்கு அர்ஜூன்சிங்தான் காரணம் என்று திண்டிவனம் ராமமூர்த்திகூறுவது உண்மை அல்ல. காங்கிரஸ் மூத்த தலைவர் என்ற முறையில் அவரை நான் அறிவேன் என்றார்இளங்கோவன்.